சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று, 1,697 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 26,45,380 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 16,969 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,594 பேர் குணமடைந்துள்ளனர். 27 பேர் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 4 பேரும், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், சென்னை, மயிலாடுதுறை, புதுக்கோட்ைட ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டிணம், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபரும் என 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,337 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்….
The post தமிழகத்தில் 1,697 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.