செயின் பறித்த வாலிபர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூரில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் யூனியன் கார்ப்பரேட் காலனி 3வது தெருவை சேர்ந்த சாந்தகுமாரி (70), கடந்த 4ம் தேதி மாலை வீட்டின் வெளியே வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தகுமாரியின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்து சாந்தகுமாரி கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் செம்மஞ்சேரியை சேர்ந்த ரோஹித் (23) என்பவர் செயின் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செயின் பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: