சின்னசேங்கல் தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணராயபுரம், ஏப். 21: கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்னசேங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சின்னசேங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் அன்புசெல்வம் தலைமையில் நடைபெற்றது. பேரணியை கிருஷ்ணராயபுரம் வட்டாரக்கல்வி அலுவலர் மனோகரன் துவக்கி வைத்தார்.

பேரணியில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தி வரும் முதன்மையான திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு செய்தனர். மேலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் போது பிள்ளைகளின் பயன்களை குறித்தும் விளக்கிக் கூறினார். இதில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன்,பள்ளி மேலாண்மைக் குழுவினர்கள், பள்ளி ஆசிரியர்கள்,இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post சின்னசேங்கல் தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: