அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்ற 360 பேர் மீது வழக்கு பதிவு

கரூர், ஜூலை 3: கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவ ட்ட மதுவிலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், கடந்த மாதம் ஜூன் 1 தேதி 30 ம்தேதி வரை கரூர், சின்னதாராபுரம், க.பரமத்தி, லாலாப்பேட்டை, வாங்கல் வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோணிமலை, சிந்தாமணிப்பட்டி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், தென்னிலை, குளித்தலை, பாலவிடுதி மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றவர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் ஜூன் 1 தேதி முதல் 30 ம்தேதி வரை மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 360 நபர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 2735 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்ற 360 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: