கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

கரூர், ஜூலை 2: கரூர் அரசுக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 131 இடங்கள் நிரப்பப்ட்டன. கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 14ம்தேதி வரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 441 இடங்கள் நிரப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி மற்றும் 26ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 391 இடங்கள் நிரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் நேற்று மூன்றாம் கட்ட கலந்தாய்வு நேற்று காலை அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் ஏற்கனவே விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 131 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

The post கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: