சாலை பாதுகாப்பு விழாவில் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை

பரமக்குடி,பிப்.7: ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் பிப்.14ம் மாதம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. டூவீலரில் செல்லும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிதல், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மதுரை தனியார் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமில் ஓட்டுநர்களுக்கு தூரப்பார்வை, கிட்ட பார்வை, கண் நீர் அழுத்தம், கண் நீர் வடிதல் உள்ளிட்டவை குறித்து இலவசமாக பரிசோதிக்கப்பட்டது. பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மப்பிரியா முன்னிலையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில், 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

The post சாலை பாதுகாப்பு விழாவில் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: