சாத்தூரில் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தூர், ஜூலை 17: சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயில் தாக்கத்தால் மக்கள் பொது வெளியில் நடமாடுவது குறைவாக இருந்தது. நேற்றும் வழக்கம் போலவே காலை முதல் வெயில் தாக்கம் இருந்து வந்த நிலையில், மாலை லேசான குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பதினைந்து நிமிடம் கனத்த மழை பெய்தது. மழையை எதிர்பார்த்து வயல்களில் உழவு பணி செய்திருந்த விவசாயிகள் மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

The post சாத்தூரில் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: