சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினராக மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மகளிர், மாணவர் உரிமைக்காகப் போராடும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவில், மாணவர் சமுதாயத்திற்கான சமூக நீதி, மகளிர் உரிமை மற்றும் பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டுள்ள மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினராக மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: