சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

மதுரை, ஏப்.10: எஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்குத்தொகுதி 28வது வார்டு சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, மதுரை கோரிப்பாளையம் முகமதியார் தெரு, பகுதியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அனைத்து அரசியல்கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், இயக்க முன்னோடிகள், அப்பகுதி ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.எஸ்டிடியூ தொழிற்சங்கம் மதுரை வடக்கு மாவட்டம் சார்பில், சமூக நல்லிணக்கஇப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, மாவட்டத்தலைவர் நிஸார் தலைமையில் நடந்தது. மாவட்டச்செயலாளர் மன்சூர் வரவேற்றார். மாநிலத்தலைவர் முஹம்மது ஆசாத், பொதுச்செயலாளர் ரவூப் நிஸ்தார், துணைமேயர் நாகராஜன் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: