கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்திவிட்டது: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பேச்சு

பிரிட்டன்: கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்திவிட்டது என ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு லேசான அறிகுறிகள் காணப்பட்டது. முழுமையாக கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததும் தனது பணிக்கு திரும்ப தொடங்கினார். இந்நிலையில், பிரிட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களுக்கு வீடியோ கால் வாயிலாக நன்றி தெரிவித்த ராணி இரண்டாம் எலிசபெத், தான் சிகிச்சை பெற்று வந்த இந்த மருத்துவமனையில் ராணி எலிசபெத் வார்டை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கோவிட் தாக்கம் தம்மை பலவீனப்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் இந்த மாதம் தனது 96வது பிறந்தநாள் கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post கோவிட் தாக்கம் என்னை பலவீனப்படுத்திவிட்டது: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: