கொல்லிமலை பிடிஓ பொறுப்பேற்பு

சேந்தமங்கலம், ஜூலை 18: கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பிடிஓவாக பணியாற்றி வந்த சரவணன், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக பிடிஓவாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி தணிக்கை பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஈஸ்வரன், கொல்லிமலை பிடிஓவாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அட்மா குழு தலைவர் செந்தில்முருகன், ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை, துணை தலைவர் கொங்கம்மாள் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை பிடிஓ.,க்கள் அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post கொல்லிமலை பிடிஓ பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: