கைதான ஒடிசா அழகியின் பரபரப்பு தகவல் 18 எம்எல்ஏ.க்களை வளைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டல்: 4 ஆண்டில் ரூ.30 கோடிக்கு அதிபதி

புவனேஸ்வர் ஒடிசாவை சேர்ந்த இளம்பெண், 18 எம்எல்ஏக்களை தனது மாய வலையில் வீழ்த்தி, ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடிசா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா (26). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், கடந்த 2015ல் பிழைப்பு தேடி புவனேஸ்வரில் குடியேறினார். அங்கு பியூட்டி பார்லரில் பணியாற்றிய போது, ஜெகபந்து சாந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் 2018ல் திருமணம் செய்தனர். கெஜபந்து, பழைய கார் விற்கும் தொழில் செய்தார். இதனால், பல பணக்காரர்களின் தொடர்பு கிடைத்ததால், அர்ச்சனாவை வைத்து ரகசியமாக பாலியல் தொழில் செய்துள்ளார். அர்ச்சனா, அரசியல் புள்ளிகளையும் வளைத்துள்ளார்.அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் போது ரகசியமாக புகைப்படம், வீடியோ எடுத்து பின்னர் அவற்றை வைத்து சம்மந்தப்பட்டவர்களை மிரட்டி இத்தம்பதியினர் பணம் பறித்துள்ளனர். சமீபத்தில் சினிமா இயக்குநர் ஶ்ரீதர் என்பவரை ரூ.3 கோடி கேட்டு மிரட்டிய போது, அவர் போலீசில் புகார் தர, கடந்த 6ம் தேதி போலீசார் அர்ச்சனாவை கைது செய்தனர். விசாரணையில் அவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த 4 ஆண்டில் அர்ச்சனா ரூ.30 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். அரண்மனை போன்ற பங்களா, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உள்அலங்கார பொருட்கள், சொகுசு கார்கள், விலையுயர்ந்த 4 உயர் ரக நாய்கள், வெள்ளைக் குதிரை போன்றவற்றை வாங்கி உள்ளார். இவர் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த 18 எம்எல்ஏக்களை மிரட்டி பணம் பறித்திருப்பதாக அம்மாநில பாஜ தலைவர் பாபு சிங் குற்றம்சாட்டி உள்ளார். அர்ச்சனாவுக்கும் ஆளுங்கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காங்கிரசும் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால், இவற்றை பிஜூ ஜனதா தளம் மறுத்துள்ளது. இந்த விவகாரம் ஒடிசா அரசியலில் தற்போது பெரும் புயலை கிளப்பி உள்ளது….

The post கைதான ஒடிசா அழகியின் பரபரப்பு தகவல் 18 எம்எல்ஏ.க்களை வளைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டல்: 4 ஆண்டில் ரூ.30 கோடிக்கு அதிபதி appeared first on Dinakaran.

Related Stories: