பொன்னை: மகன்கள் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி 91 வயது மூதாட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பூர்ணம்(91). இவர் நேற்று காலை பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த எனக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்து விட்டார். இதனால், எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.