காஞ்சிபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (27.7.2023) காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.

இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், சுய விபரக்குறிப்பு – 3 நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் – 3, கல்விச்சான்றிதழ்களின் நகல்கள் – 3, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை – 3 நகல்கள் மற்றும் ஆதார் அட்டை – 3 நகல்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94432 68192 (வாட்ஸ்அப்), 70944 91228 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: