கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் ஜாமீன் கோரி பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் மனு தாக்கல்

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும்  ஜாமீன் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் ஜாமீன் கோரி பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: