கடையை உடைத்து செல்போன்கள் கொள்ளை

குன்றத்தூர்: குன்றத்தூர் மீன் மார்க்கெட் அருகில் உள்ள பிரதான சாலையில் தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை  கடையின் கிளை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள், கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு, ஷட்டர்கள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு விலை உயர்ந்த 35 செல்போன்கள், ஒரு எல்இடி டிவி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம்  என கூறப்படுகிறது.  …

The post கடையை உடைத்து செல்போன்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: