கடனை தந்தை செலுத்தாததால் மகளுக்கு கல்விக்கடன் மறுப்பு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாணவி மேல்முறையீடு : ஆவணங்களை தாக்கல் செய்ய வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : தந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு  கல்விக்கடன் வழங்க மறுத்த  தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மாணவி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்விக் கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மாணவியின் தந்தை ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் மாணவிக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து வங்கி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து  மாணவி தீபிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபிகாவின் தந்தை வங்கி கடன் பெற்றதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பான ஆவணங்களை ஜூலை 16ம் தேதி தாக்கல் செய்ய பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: