உள்ளட்சி தேர்தல் குறித்து குன்றத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து குன்றத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குன்றத்தூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.,வுமான மதனந்தபுரம் பழனி தலைமை வகித்தார். கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எவ்வாறு வெற்றி பெற செய்வது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்….

The post உள்ளட்சி தேர்தல் குறித்து குன்றத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: