உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை, மே 10: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு வேனில் 15 பெண்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றனர். இந்த வேன் நேற்று உளுந்தூர்பேட்டை அடுத்த சின்னக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் சென்ற 15 பெண்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநாவலூர் காவல்நிலைய போலீசார் படுகாயம் அடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வேனை கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். நடுரோட்டில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் உளுந்தூர்பேட்டை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து திருநாவலூர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: