உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கூடலூர், டிச. 8: காமயகவுண்டன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஆறுமுக நயினார், துணைத்தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தைப் பற்றியும், இந்நாளில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றியும் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்தவ அலுவலர் சிராஜுதீன் பேசினார்.

மேலும், தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் செயல்பாடுகள், ஹெச்ஐவி நோயாளிகளின் பராமரிப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். பின்னர் அனைவரும் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அப்பகுதிகளில் உள்ள ஆட்டோக்களில் ஒட்டப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் முரளி, ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மைய ஆலோசகர் மாலதி, ஆரோக்கிய அகம் இந்திராணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: