சென்னை: வெளிமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கான கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கிவைத்தார். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம் நீட் தேர்வு குறித்து கேள்வியெழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீட் தேர்வை பொறுத்தவரையில் 9 கல்லூரிகளில் 3,145 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், எவ்வளவு மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள் என்பது குறித்து வரும் 6ம் தேதி தான் எங்களுக்கு தெரியவரும் என்றும், நீட் பயிற்சி முடிந்து இன்று மாணவர்கள் வீடு திரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.