சென்னை ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை!: மாவட்ட ஆட்சியர் விளக்கம் May 05, 2021 செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கலெக்டர் செங்கல்பட்டு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மாவட்ட கலெக்டர் தின மலர் செங்கல்பட்டு: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 11 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து சென்னையில் இருந்து லாரிகள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். ஆக்சிஜன் விநியோகத்தில் இருந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையை விட 2ம் அலையில் பாதிப்பு 5 மடங்கு அதிகமாக உள்ளது. உயிரிழந்த 13 நோயாளிகளில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். உயிரிழந்த மற்ற 12 நோயாளிகளுக்கு இணை நோய்கள், வயது மூப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தன என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேவையான ஆக்சிஜன் மருத்துவமனையில் கையிருப்பு இருப்பதாகவும், மேலும் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எனினும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாக ஆட்சியர் விளக்கம் அளித்தார். … The post ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை!: மாவட்ட ஆட்சியர் விளக்கம் appeared first on Dinakaran.
மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்
ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மாதவரம் – சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வழித்தடங்களில் இரட்டை அடுக்கு மேம்பாலம்: 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்
வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரூ.4.5 கோடியில் பூங்கா பேருந்து நிலைய பணி: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்
பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்: வாகன ஓட்டிகள் அவதி பாலம் அமைத்து தர கோரிக்கை
அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு
தமிழ்நாடு யாதவ மகாசபை செயற்குழுவில் யாதவ மாணவர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் நிதியுதவி: மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன் வழங்கினார்
2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகள் இருக்கும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்