சென்னை: சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் செல்ல வசதியாக இலவச பேட்டரி கார் சேவை துவங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, சர்வதேச விமான முனையங்களுக்கு இடையே பயணிகளின் வசதிக்காக, 24 மணி நேர இலவச பேட்டரி கார் சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை முதல் விமான நிலையத்தில் இருந்து, அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இலவச பேட்டரி கார் வாகன சேவையை விரிவுபடுத்தி துவக்கி வைக்கப்பட்டது. இதன்படி மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 24 மணி நேர பேட்டரி கார்கள் சர்வதேச விமான முனையம் வழியே உள்நாட்டு விமான முனையத்தை அடையும். அதேவழியில் மீண்டும் பேட்டரி கார்கள் மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடையும். இதில் பயணிகளுக்கோ, அவர்களின் உடமைகளுக்கோ எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. விமான நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் பேட்டரி கார் சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது….
The post விமான நிலையம் – மெட்ேராவுக்கு இலவச பேட்டரி கார் சேவை துவக்கம் appeared first on Dinakaran.
