சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் மது குடிக்க பணம் தராத தாய் மாமனை அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏரிக்கரை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வந்த பவித்ரன் (30), பணம் கேட்டு தொந்தரவு செய்து தாக்குதலில் ஈடுபட்டதில் அவரது தாய் மாமன் முருகன் (50) என்பவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
