சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். முறைகேடுகள் நடந்துள்ளது எனக்கூற என்ன ஆதாரங்கள் உள்ளன என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குதிரைபேரம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளிவைத்துள்ளது.
