சென்னை: விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியை ரூ.75,000 ஆக உயர்த்தியது போதாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் கூடுதலாக 21 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைவார்கள். சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
