சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, அக்கட்சியில் இருந்து விலககியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக யுவராஜா அறிவித்துள்ளார். தமாகா மாநில பொதுச்செயலராக இருந்த யுவராஜா அக்கட்சியில் இருந்து விலகியதாக ஜி.கே.வாசனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 25 ஆண்டுகளாக பயணித்த அரசியலில் இருந்தே விலகுவதற்கான முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று யுவராஜா கூறியுள்ளார்.
