திருவாரூர்,ஏப்.21: திருவாரூர் மாவட்டத்தில் இன்று (21ம்தேதி) மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது என்று தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (23ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதனையொட்டி இன்று (21ம்தேதி) மாலை 6 மணிமுதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், விதிமுறைகள் செயலில் இருக்கும்.
