தோட்டாகுறிச்சி அருகே மதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது

 

வேலாயுதம் பாளையம், ஏப். 21: மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர். தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரை (50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் பாண்டித்துரையை கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: