கேரளாவில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் இன்று கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகாவின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று வடக்கு கர்நாடகாவில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திராவில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.