ஒரு வாரத்தில் குட்கா விற்ற 50 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த 8ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சென்னையில் அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வட மாநிலங்களில் இருந்து ரயில் மற்றும் வாகனங்கள் மூலம் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்ததாக தனித்தனியாக 50 வழக்குகள் போலீசார் பதிவு செய்து, வியாபாரிகள் உள்பட 50 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ குட்கா புகையிலை, 3 கிலோ மாவா, 1 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நடவடிக்கை தொடரும் என தெரிவித்தனர்.

The post ஒரு வாரத்தில் குட்கா விற்ற 50 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: