மலப்புரத்தில் இருட்டுக்குத்தி, பொதுக்கல்லு, பனம்காயம், போதனம் ஆகிய இடங்களில் இருந்து சாலியாற்றில் 60பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 26 பேரின் உடல்கள் முழுமையாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களின் உடல்கள் தலை, கை, கால்கள் துண்டாகி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனிடையே வயநாடு நிலச்சரிவில் மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய 3 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டு தனித் தீவுகளான இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை இயற்கை விடுத்துள்ள எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
The post ஆற்றில் மிதந்து வந்த 60 உடல்கள் மீட்பு.. வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு: மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை!! appeared first on Dinakaran.