வெற்றிக்கனியை பறிக்க போவது யார்?: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு..!!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. 224 உறுப்பினா்களைக் கொண்ட கா்நாடக மாநில சட்டப் பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்தம் 5,31,33,054 வாக்காளர்கள் உள்ளனர். 11,71,558 புதிய வாக்காளா்கள் முதல்முறையாக வாக்களிக்கின்றனா். தோ்தலை அமைதியாக நடத்துவதற்காக, 1.60 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

The post வெற்றிக்கனியை பறிக்க போவது யார்?: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: