உசிலம்பட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தனியார் கல்லூரி முற்றுகை

 

உசிலம்பட்டி, ஏப். 25: உசிலம்பட்டி அருகே பேராசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை தொடர்பான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தனியார் கல்லூரியை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக பேராசிரியர்கள் மற்றும் மாணவர் என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களில் 3 பேரை கைது செய்தனர்.தலைமறைவான இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பிரச்னையில் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் கருமாத்தூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கல்லூரி முன்பாக நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

The post உசிலம்பட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தனியார் கல்லூரி முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: