கைகளாலும், மின்சார ஒயர், பிவிசி குழாய்களை பயன்படுத்தியும் மாணவரை கடுமையாக தாக்குவதுடன், கால்களாலும் உதைத்துள்ளனர். மேலும் சாப்பாடு தராமல் பூட்டிய அறைக்குள் மாணவரை சிறை வைத்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மாணவரை 3 பேரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தெரிந்த அக்கம்பக்கத்திலுள்ள சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து செயின்ட் சார்லஸ் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த வெங்கடேஷ் ஆர். சத்தாரு, ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா, நிகில் வர்மா பெனுமேட்சா ஆகிய 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது மனிதர்களை கடத்துதல், கடுமையாக தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அமெரிக்காவில் இந்திய மாணவனை தாக்கி சிறை வைப்பு: இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.