பின்னர் அவர் பேசியதாவது:
2014ம் ஆண்டு வரை 5 நகரங்கள்தான் மெட்ரோ சிட்டிகளாக இருந்தது. தற்போது இது 27 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் வீடு தோறும் குழாய் மூலம் சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் 80 கோடி பேருக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு டிசம்பர் மாதம் வரை வழங்கப்படும். 500 ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 1 லட்சம் புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளை உருவாக்கியுள்ளோம். வரும் 2047ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post 2047ல் இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்க இலக்கு: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.