நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் : அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், ““கால்நடைகள் முதல் தடவை வீதிகளில் பிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதமும், மறுமுறை பிடிக்கப்பட்டால் ₹10,000 அபராதமும், 3ம் முறை பிடிபட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்து அவை இனப் பெருக்கம் செய்யாமல் பார்த்துக் கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது”” இவ்வாறு தெரிவித்தார்.

The post நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் : அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: