தூத்துக்குடியில் தற்போது பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க ACME நிறுவனம் 52,000 கோடி ரூபாயும், Petronas நிறுவனம் 34,000 கோடி ரூபாயும், Sembicorp நிறுவனம் 36,238 கோடி ரூபாயும், Leap Green Energy நிறுவனம் 22,842 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி கிரீன் ஹைட்ரஜன் திட்டம் மூலம் தூத்துக்குடி பகுதியில் சுமார் 1511 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சோஜிட்ஸ் கார்ப் (Sojitz Corp) மற்றும் கியூஷு எலக்ட்ரிக் பவர் (Kyushu Electric Power) உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்களுடன் செம்ப்கார்ப் இணைந்துள்ளது.
The post தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்கிறது சிங்கப்பூர் செம்கார்ப் நிறுவனம்!! appeared first on Dinakaran.