தற்போது, பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு நாவல் பழம் வரத்துவங்கியுள்ளது. தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் கலைஞர் அரங்கம் அருகே நாவல்பழங்களை விற்பனை செய்து வரும் குருராஜா என்பவர் கூறுகையில், ‘‘நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீசன் நேரத்தில் வரும் பழங்களை விற்று வருகிறேன். தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கியுள்ளது. முதன்முதலாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் சீசன் முழுமையாக தொடங்கிய பிறகு மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும். தற்போது, நான் மட்டும்தான் பழம் வாங்கி வந்துள்ளேன். இன்றைய நிலையில் ஒரு கிலோ ரூ.480க்கு விற்பனையாகிறது. சீசன் முழுமையாக தொடங்கிய பின்பு அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்போது ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்கப்படும். நாவல் பழத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதால் சர்க்கரை நோயாளிள் இதனை அதிகமாக விரும்பி வாங்கிச் செல்கின்றனர். பொதுவாக அனைவருக்குமே இந்த பழம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியதுதான். இதன் விதையை காயவைத்து பொடி செய்து, பால் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம்’’ என்றார்.
The post தூத்துக்குடியில் நாவல் பழம் விற்பனை ஜரூர்: கிலோ ரூ.480க்கு விற்பனை appeared first on Dinakaran.