கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தினமும் மாலையில் எண்ணப்படுகிறது. அதன்படி நேற்று நடந்த கணக்கீட்டின்படி ரூ.3.71 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 19 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.