திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத தரிசனத்துக்கு டிக்கெட் வெளியிடும் தேதிகள்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத சுவாமி தரிசன டிக்கெட் வெளியிடும் தேதிகள் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 18ம் தேதி காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத தரிசனத்துக்கு டிக்கெட் வெளியிடும் தேதிகள்: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: