திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி நடைபாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அவ்வழியாக சிறுத்தை சுற்றித்திரிந்தது. இதனைக்கண்டு பீதியடைந்த வியாபாரிகள் உடனடியாக வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் சிறுத்தை புதருக்குள் சென்று மறைந்துவிட்டது.

இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் கூட்டமாக மலையேற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: