திருக்கச்சூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட திருக்கச்சூர் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் சாலையோரமாக முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் சாலையோரம் இறந்து கிடந்த முதியவரை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்பு, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது மது போதையில் தவறி விழுந்து இறந்து விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்தவர் யார்? இவர் எதற்காக இங்கு வந்தார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருக்கச்சூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: