மாமல்லபுரத்துக்கு அடுத்த மாதம் முதல் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: வெளிநாட்டு பயணிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு அடுத்த மாதம் முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வெளிநாட்டு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 6 மாதங்கள் சீசன் காலம் என்பதால் வெளிநாட்டு பயணிகள் தினமும் சொகுசு பேருந்து மற்றும் கார்களில் வருவார்கள். மேலும், இவர்களுக்கு இணையாக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில சுற்றுலாப் பயணிகளும் வார இறுதி நாட்களான சனி – ஞாயிறு ஆகிய 2 நாட்களில் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

அப்படி, வருபர்கள் அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து, அவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு வீடு திரும்பிச் செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்திருப்பர். எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வார இறுதி நாட்களான சனி – ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாட்டு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரத்துக்கு அடுத்த மாதம் முதல் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: வெளிநாட்டு பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: