அப்போது அங்கே பனியன் துணியினால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து துணி பாகங்கள் சிதறி கிடந்ததை கைப்பற்றினர்.விசாரணையில் ஆனந்தபுரம், நேரு தெருவை சேர்ந்த திவாகர் (28) என்பவர் சம்பவ நேரத்தில் அந்த இடத்திலிருந்து ஓடியதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் திவாகர் வீட்டிற்கு சென்று விசாரித்த போது வீட்டில் அவர் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு நபரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள திவாகரை தேடி வருகின்றனர்.
The post கிழக்கு தாம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பில் ஒருவரை பிடித்து விசாரணை appeared first on Dinakaran.