சமூக வலைதளம் மூலம் சீனப் பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழர் முறைப்படி தாலி கட்டிய கடலூர் இளைஞர்

கடலூர்: சமூக வலைதளம் மூலம் சீனப் பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழர் முறைப்படி தாலி கட்டிய கடலூர் இளைஞர் பாலச்சந்தர் என்பவர் திருமணம் செய்து கொண்டார். கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் இவருக்கும் சீனா நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுளள்து.

இது நாளடைவில் காதலாக மாறியது அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர்.அதன்படி கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் பாலச்சந்தர், மணமகள் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோவிற்கு தாலி கட்டினார். மணமகன் தமிழர் முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் பட்டு புடவை, தங்க நகைகள் அணிந்து இருந்தனர்.

The post சமூக வலைதளம் மூலம் சீனப் பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழர் முறைப்படி தாலி கட்டிய கடலூர் இளைஞர் appeared first on Dinakaran.

Related Stories: