இதனை மாநிலங்களவையில் முறியடிக்க கெஜ்ரிவால் அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறார். முதலில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து ஆதரவு கோரிய அவர், அடுத்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்தித்தார். இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் பேட்டியளித்த கெஜ்ரிவால், “நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். மேலும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தால் 2024 ல் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது,’’ என்று தெரிவித்தார்.
The post அவசர சட்ட விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு தாக்கரே ஆதரவு appeared first on Dinakaran.