அதன்பிறகு, பத்மநாபன் மற்றும் அவரது நண்பர்கள் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுயேட்சை எம்எல்ஏ நேருவின் ஆதரவாளரான ஜோசப் என்பவரது இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருசக்கர வாகனம் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர், பத்மநாபன் தரப்பினர் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேலும் அசம்பாவித நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபன், விக்கி, தமிழ்ச்செல்வன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
The post கோயில் திருவிழாவில் குடித்துவிட்டு தகராறு: பாட்டு கச்சேரி மேடையை சேதப்படுத்தி இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.