தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: