சில நேரம் நாய்கள் ஓடிவந்து வாக்கிங் செல்கின்றவர்களை கடித்து விடுவதாக தெரிகிறது. இதனால் மைதானத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், மாடுகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்னர். மேலும் இந்த மைதானத்துக்குள் மாடுகள், நாய்கள் நுழையாத வண்ணம் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சில நாட்களுக்கு முன், திருவொற்றியூர் கிராமத் தெருவில் நடந்துசென்ற மதுமதி என்ற பெண்ணை எருமை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
The post மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் தெரு நாய், மாடுகள் சுற்றுவதால் அச்சத்தின் பிடியில் பொதுமக்கள் appeared first on Dinakaran.